Monday 12 March 2012

பறையின் சித்திரங்கள் -3


 1 . பறை மட்டும் தனியாய் 
       தனி வாசித்த 
      மிருதங்கக்காரர் இறப்பில் .


2 .  இரவல் தாளம் தேடாத 
      தன்மானப் பாடகன் 
      தட்டிப் பாடும் பறை .


3    குச்சி விரல்கள் 
      பறையில் மீட்டின
      பாலை யாழ் .


4   பறை ஒலித்த மேடை
     மறுக்கும் நட்டுவாங்கம் 
     எதிர் சங்கமம் .


5 . சகல ராகங்களையும் 
     தாங்கும் பறை . 
     உச்ச ஸ்தாயியில் .




             

No comments:

Post a Comment