Wednesday 19 June 2013

எனது முகநூல் பக்கங்கள்





1 இருண் ட காலமா ?

2004 ல் தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்குவதற்காக
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத துறையால் 

ஆதாரமாக கொள்ளப்பட்ட 
தமிழ் நூல்கள் 41.

பத்துப்பாட்டு -10
எட்டுத்தொகை -8
பதினெண் கீழ்கணக்கு --18
பெருங்காப்பியம் --2
(சிலப்பதிகாரம் ,மணிமேகலை )
தொல்காப்பியம் --1
முத்தொள்ளாயிரம் --1
புறப்பொருள் வெண்பாமாலை --1

இவற்றுள் 18ம் 2ம் ஆக 20 நூல்கள் களப்பிரர் காலத்தில் தோன்றியவை . (ஏறத்தாழ 50%)

நாமோ கொஞ்சமும் கூசாமல் களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம் .

(வேறொன்றுமில்லை களப்பிரர்கள் புத்த சமண சமயங்களை ஆதரித்தார்கள் ..அவர்களும் அச்சமயங்களும் அகன்ற பின்னர் வந்த இந்து சனாதனிகள் திரித்து வைத்த சரடு அது .)



2 மகாப் பேறு 

மத்திய மாநில அரசுப்பணிகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு
 6 மாத காலத்திற்கு மகப்பேறு விடுப்பு தற்போது நடைமுறையில் உள்ளது .

இந்தியாவில் எந்த பெண் ஊழியருக்கும் 1942 வரை இவ்விடுப்பு கிடையாது .

அப்போது ஒரு பெண் ஊழியர் கருவுற்றால் தானாகவே முன்வந்து
பதவி விலகி விடவேண்டும் .

அப்படி தானாகவே முன்வந்து பதவி விலகிய ஒருவர்
குழந்தை பிறந்தபிறகு தங்கள் வசதிக்கேற்ப சிலகாலம் கழித்து
ீண்டும் வேலைக்கு விண்ணப்பித்து நியமனம் பெறலாம் .
மகப்பேற்றிற்காக பதவி விலகியவர்களுக்கு முன்னுரிமை உண்டு .

மகப்பேற்றிற்காக தானே பதவி விலகாதவர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் .அவர்களுக்கு மீண்டும் வேலைகிடைக்காது .

1942ல் வைசிராய் நிர்வாக கவுன்சிலில் ஒருவர் தொழிலாளர் துறை
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மனிதாபிமானத்தோடு இப்பிரச்சினையை அணுகினார் .

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பினை
அறிவித்தார் . பெண்மையின் அறிவையும் நலத்தையும் ஒருசேர பாதுகாத்தார் .சுதந்திர இந்தியாவிலும் அது இன்றுவரை தொடர்கிறது .

அந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் .


3 கக்கா ஒரு கழிவுச்சொல்லா 

0 ஏய் ஏய் ..கக்கா... அதை மிதிச்சிராதே
0 அம்மா ..பாப்பா கக்கா போயிட்டா பாரு
0 அய்யே .. கக்கா, அதைத் தொடாதே

இந்த உரையாடல்களில்' கக்கா' என்ற சொல் எதைக் குறிக்கிறது என நமக்குத் தெரியும் .

ஆந்திராவில் மாலா, மாதிகா, தெக்கலி .போன்ற ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர் வழிபடும் பெண் தெய்வத்தின் பெயர் கக்கா . வழிபாட்டின் அடிப்படையில் அம்மக்கள் 'கக்கா'க்கள் என அழைக்கப்பட்டனர் .

இன்றைக்கும் கக்கா வழிபாடு ஆந்திராவில் உண்டு .

பிழைப்பு தேடி கக்காக்கள் சென்னை வந்தபோது அவர்களுக்கு இங்கு கிடைத்தது துப்புரவுத் தொழில்தான் .குறிப்பாக கழிவறை சுத்தம் செய்யும் தொழில் .

இப்படித்தான் ஒரு தெய்வத்தின் பெயர் கழிவுச் சொல்லாய் தமிழகத்தில் ஆகிப்போனது .

இன்றைக்கும் ஆந்திராவில் கக்கா , கக்கன் (?), போன்ற பெயர்கள்
ஒடுக்கப்பட்ட மக்களிடையே புழக்கத்தில் உண்டு .
3