Saturday 17 December 2011

தொன்னூறுகளில் எனது கவிதைகள்





0   தவளையின் கனவில்
     விரதப் பாம்புகள் .
     வண்ணத்துப் பூச்சியின் கனவில்
     கையில்லாச் சிறுவர்கள் .
     மானின் கனவில்
     புல் மேயும் புலிகள் . 
     எலியின் கனவில்
     நட்புடன் பூனைகள் .  


     நத்தையின் கனவில் 
     நாளைய தளிர்கள்.
     தேனீக்களின் கனவில் 
     புள்ளிவட்ட முதல் துளி.   

    நாயின் கனவில் 
    நிமிர்ந்த  வால்கள். 
    கோழியின் கனவில் 
    வானத்தில் நீச்சல் .

   மனிதனின் கனவில் 
   மற்றொரு கனவு .



2  0   வாய் பெயர்களைச் 
     சொல்லிச் சொல்லிப் பார்க்கிறது .
     கண்கள் நான்கும் பேசிக்கொள்கின்றன 
     காதுகள் கொலுசின் ஒலியைத்தான்  
     சுவாசித்துக்கொள்கின்றன
     மூக்கோ கூந்தலின்
     மலர்மொழியை கேட்டு மயங்குகிறது .
     மெய்யோ தனை மறந்து
     பொய்யாகிப்  போகிறது .

      இந்த காதலில் மட்டுந்தான் 
      புலன்கள் 
      தங்கள் கடமைகளைக்கூட
     மாற்றிக்கொள்கின்றன. 

      புலன்களே மாற்றிக்கொள்ளும்போது 
      குலங்கள் மாற்றிக்கொண்டால் என்ன ...



3  0    வெளித்தடம் 

        எண்ணம் புகாத வெளியில் 
        சிகரத்தின் ஆழமும் 
        ஆழத்தின் முகடும் .

        ஒளிவேர்ச்செடியின் 
        மோன நுனிப்பூக்கள் 

        எதிரெதிர் அடிவானப்பெருவெளி
        புள்ளியாய் ......

         பெருங்காற்றுக்கு எதிராய் 
         முகங்கொடுப்பு....
         ஈர அலைக்கரையில்
         கால்பதிப்பு .....

         திறந்து வெளிவந்து 
         முழுதும் திறந்து கிடப்பு....

         எண்ணச்சிறகுகளை  
         கழட்டிவீசிவிட்டு
         சக.....  வா 
         வெளிக்கு வெளியே . 






2 comments:

  1. மெய்ப்படாக் கனவுகள்... மெய்ப்பட்டால் மேவுமா?

    ReplyDelete
  2. 2.புலன்களின் மாற்றம்
    குலங்களை மாற்றும்..

    3. எல்லைகள் இல்லா வெளித்தடம் வசப்படும்
    எண்ணச் சிறகுகள் விரிதலிலும் வீசலிலும்.

    ReplyDelete